Friday, 3 February 2012

தமிழக அரசு கவணிக்குமா....

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்

ஒரு வருடத்தில் விபத்தில் உயிரிழப்பவரின் எண்ணிக்கை மட்டும்  ஐந்து சுனமிக்களுக்கு சமம் என ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது....


ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஞ்சி மாவட்டத்தில் சமீபகாலமாக நிறைய விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதில், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்களே விபத்தில் சிக்கி அதிகளவில் உயிரிழந்தது தெரியவந்தது.

எனவே ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதை செயல்படுத்தும் ஒரு வழியாக இந்த நூதன உத்தரவை அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் ராஞ்சி மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அறிவிப்பு பலகைகளை பெட்ரோல் பங்குகளில் வைக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.இந்த நூதன உத்தரவு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமும் பின்பற்றலாமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.