Thursday, 9 February 2012

பள்ளியில் ஆசிரியை கொலை

சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த உமா மகேஸ்வரியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் முகமது இர்பான் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்தான்.

தன்னைப் பற்றி பெற்றோரிடம் புகார் கூறியதாலும், பெற்றோரை அழைத்து வரும்படி தொந்தரவு செய்ததாலும், மதிப்பெண் குறைத்து போட்டதாலும் ஆசிரியையை குத்திக்கொன்றதாக மாணவன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.



எல்லா புகழும் தொலைகாட்சியையும்,   திரயுலகையுமே  சாரும்.  என்னதான் திரைத்துறையினர்  நாட்டில் நடக்கும் சம்பவங்களின் பிரதிபலிப்புதான் சினிமாவும் சீரியலும் என்று சப்பைக்கட்டு கட்டினாலும்,  இந்த இரண்டும் தான் மாணவர்களின் வாழ்கையை சீரழிக்கிறது. உதாரணமாக விஜய் டிவியில் கனா காணும்  காலங்கள் தொடரில் கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களை சீரியலாக ஒளிபரப்புகிறார்கள். என்னதான் கல்லூரியில் நடக்ககூடியவையாக இருந்தாலும் அதை பார்ப்பது கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, குடும்பமாக  அதை பார்க்கிறார்கள் குறிப்பாக பள்ளி மாணவர்களும் அதை பார்க்க தவறுவதில்லை. அப்படி இருக்கும் வேலையில்  அந்த பள்ளி மாணவர்கள் கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களை பள்ளியிலேயே செய்ய விளைகிறார்கள் மேலும் அதில் தவறேதும் இல்லை என்ற மனோபாவம் அவர்களிடம் வந்து விடுகிறது.  இதன் தாக்கமே இந்த கொலை என்று கூட கூறலாம்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு "உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூடமுடியாது" அது போல் மீடியாக்களில் காண்பிப்பவர்கள் காண்பிக்கட்டும் பெற்றோர்களே நீங்கள் டிவி பார்க்கும் நேரத்தை தியாகம் செய்யத்தான் வேண்டும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக... செய்வீர்களா?

Friday, 3 February 2012

தமிழக அரசு கவணிக்குமா....

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்

ஒரு வருடத்தில் விபத்தில் உயிரிழப்பவரின் எண்ணிக்கை மட்டும்  ஐந்து சுனமிக்களுக்கு சமம் என ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது....


ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஞ்சி மாவட்டத்தில் சமீபகாலமாக நிறைய விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதில், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்களே விபத்தில் சிக்கி அதிகளவில் உயிரிழந்தது தெரியவந்தது.

எனவே ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதை செயல்படுத்தும் ஒரு வழியாக இந்த நூதன உத்தரவை அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் ராஞ்சி மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அறிவிப்பு பலகைகளை பெட்ரோல் பங்குகளில் வைக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.இந்த நூதன உத்தரவு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமும் பின்பற்றலாமே...