Thursday, 9 February 2012

பள்ளியில் ஆசிரியை கொலை

சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த உமா மகேஸ்வரியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் முகமது இர்பான் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்தான்.

தன்னைப் பற்றி பெற்றோரிடம் புகார் கூறியதாலும், பெற்றோரை அழைத்து வரும்படி தொந்தரவு செய்ததாலும், மதிப்பெண் குறைத்து போட்டதாலும் ஆசிரியையை குத்திக்கொன்றதாக மாணவன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.



எல்லா புகழும் தொலைகாட்சியையும்,   திரயுலகையுமே  சாரும்.  என்னதான் திரைத்துறையினர்  நாட்டில் நடக்கும் சம்பவங்களின் பிரதிபலிப்புதான் சினிமாவும் சீரியலும் என்று சப்பைக்கட்டு கட்டினாலும்,  இந்த இரண்டும் தான் மாணவர்களின் வாழ்கையை சீரழிக்கிறது. உதாரணமாக விஜய் டிவியில் கனா காணும்  காலங்கள் தொடரில் கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களை சீரியலாக ஒளிபரப்புகிறார்கள். என்னதான் கல்லூரியில் நடக்ககூடியவையாக இருந்தாலும் அதை பார்ப்பது கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, குடும்பமாக  அதை பார்க்கிறார்கள் குறிப்பாக பள்ளி மாணவர்களும் அதை பார்க்க தவறுவதில்லை. அப்படி இருக்கும் வேலையில்  அந்த பள்ளி மாணவர்கள் கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களை பள்ளியிலேயே செய்ய விளைகிறார்கள் மேலும் அதில் தவறேதும் இல்லை என்ற மனோபாவம் அவர்களிடம் வந்து விடுகிறது.  இதன் தாக்கமே இந்த கொலை என்று கூட கூறலாம்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு "உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூடமுடியாது" அது போல் மீடியாக்களில் காண்பிப்பவர்கள் காண்பிக்கட்டும் பெற்றோர்களே நீங்கள் டிவி பார்க்கும் நேரத்தை தியாகம் செய்யத்தான் வேண்டும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக... செய்வீர்களா?

Friday, 3 February 2012

தமிழக அரசு கவணிக்குமா....

ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்

ஒரு வருடத்தில் விபத்தில் உயிரிழப்பவரின் எண்ணிக்கை மட்டும்  ஐந்து சுனமிக்களுக்கு சமம் என ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது....


ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஞ்சி மாவட்டத்தில் சமீபகாலமாக நிறைய விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதில், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தவர்களே விபத்தில் சிக்கி அதிகளவில் உயிரிழந்தது தெரியவந்தது.

எனவே ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதை செயல்படுத்தும் ஒரு வழியாக இந்த நூதன உத்தரவை அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் ராஞ்சி மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அறிவிப்பு பலகைகளை பெட்ரோல் பங்குகளில் வைக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.இந்த நூதன உத்தரவு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமும் பின்பற்றலாமே...

Monday, 23 January 2012

அணு உலை போராட்டத்தை பொறுத்தவரை சில கேள்விகள்......


--> இவர்கள் போராட்டத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் ஜப்பான் அணு உலைகளைகளில் நடந்த விபத்தினால் அன்றைய தினத்தில் ஜப்பான், அணு உலைகளுக்கு பதிலாக மாற்று வழியை காணவேண்டும் என்று ஜப்பான் கூறியதை கெட்டியாக பிடித்துகொண்டு இங்கும் அணு உலையை மூடவேண்டும் என்று முழங்கி வந்தார்கள், அனால் இன்று ஜப்பானே தனது நில நடுக்க நிவாரணப்பணிகளை முடித்துக்கொண்டு அதன் அணு உலைகளை செயல்படுத்த துவங்கி விட்டது. அனால் இங்கு இன்னும் அடிப்படை பணிகளை கூட முடிக்க விடாமல் தடை போட்டு வருகிறார்கள்.

--> சரி அணு உலைகளினால் ஏற்படும் பேராபத்தை எதிர்த்துதான் இவர்களது முழக்கம் 
என்பது உண்மையானால் ஏன் இவர்கள் கல்பாக்கம் அணு உலைகளை மூடுவது சம்மத்தமாக எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

--> ஆபத்து என்று எடுத்துக்கொண்டால் சாதாரண கொசு வர்த்தி கோயிலினால் கூட கான்செர் பரவும் ஆபாயம் உள்ளதென தெரிவிக்கிறது ஒரு ஆய்வறிக்கை அப்படியென்றால் இந்த சகோதரர்கள் இதனை ஏன் எதிர்கவில்லை, மேலும் நகர வாசிகளை விட மீனவ நண்பர்களுக்கு கடலில் வரும் சுனாமியை பற்றி நன்கு அறிவர் அப்படி என்றால் அவர்கள் என்ன எப்போதோ  வரும் சுனாமிக்காக தங்களது இருப்பிடத்தை காலி செய்து விட்டு வந்துவிட்டனரா என்ன? இல்லையே.

--> அணு உலைகளின் பணிகள் முழுவதுமாக முடிந்து மின்சாரத்தில் தமிழகம் தன்னிறைவு பெரும் வேலையில் அணு உலைகள் வேண்டாம் என்று போடும் கோஷம் சரியானது அல்ல, தற்போதைக்கு அணு உலைகளை செயல் படுத்த துவங்கி விட்டு மேலும் புதிய அணு உலைகளுக்கு செலவு செய்யாமல் அரசை மாற்றுவழி காணத தூண்டுகிற இயக்கமாக மாறினால் தமிழகம் இவர்கள் பின்னல் நிற்கும்.....

Friday, 6 January 2012

மருத்துவர்கள் போராட்டம் நியாயமானதா....

மக்களே போராடும் முன் எதற்காக போராடுகிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் கொலை செயப்பட்ட டாக்டர் அறுவை சிகிச்சை செய்பவர் அல்ல மேலும் அவர் ஒரு அனச்ச்தீசிய மருத்துவர் ஆவார் (டெக்கான் குரோனிகல் - 05-01-12).

  அவர் எப்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்னதான் அவர் மருத்துவ துறையை சார்ந்தவராக இருந்தாலும் அவர் அந்த துறையில் நிபுணத்துவம் இல்லாமல் ஒரு சிகிச்சையில் அவரர்  ஈடுபடும் போது அவரு போலி மருத்துவருக்கு சமமானவரே.

அவ்வாறு நம் எடுத்துக்கொண்டால் இபொழுது நாடே போரடிகொண்டிருக்கும் போராட்டம் ஒரு போலி மருத்துவருக்காகவா....
ஒரு உயிர் பலி என்பது ஏற்க முடியாதுதான் ஆனால் அதற்காக அந்த மருத்துவரால் இறந்த உயிர் என்பது உயிரில்லையா....

எனவே என்னுடைய மேலான கருத்தெல்லாம் போராட்டம் வேண்டாம்   என்பதே... இறந்த மருத்துவரை மட்டும் அல்ல இறந்த அந்த கர்ப்பிணியையும் சகோதரியாக பாருங்கள் ப்ளீஸ்....