Wednesday, 21 December 2011

யுரெனியம் உள்ளது அணு மின் நிலையங்கள் இல்லை!


உலகிலுள்ள யுரேனிய வளத்தில் 40 விழுக்காடு ஆஸ்ட்ரேலியாவில்தான் உள்ளது. இந்தியாவைப் போல் அந்நாட்டு எரிசக்தித் தேவையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்நாட்டில் அணு மின் சக்தி நிலையம் என்று ஒன்று கூட இல்லை. யுரேனியத்தைப் போல் நிலக்கரியும் அதிகமாக உள்ள நாடு என்பதால் அவர்கள் அனல் மின் நிலையங்களைத்தான் அதிகம் அமைத்துள்ளார்கள். அது கரியமிள வாயுவை அதிகம் வெளியேற்றக் கூடியது அல்லவா? எனவே தூய்மையான எரிசக்தி பற்றி பேசும் ஆஸ்ட்ரேலியா அணு சக்தி மின் தயாரிப்புக்கு நாடவில்லை! சூரிய சக்தியையே நாடுகிறது.

அங்குள்ள புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பான்மை வீடுகளில் கூரைகளில் (அங்குள்ள வீடுகளில் மொட்டை மாடிகள் இல்லை) சூரிய ஒளியை வாங்கும் சூரிய சக்தி அமைப்புகளை (Photo Voltaic panels) நிருவியுள்ளார்கள். இதனை நிறுவ அங்குள்ள வங்கிகள் கடன் அளிக்கின்றன. சூரிய சக்தியால் உருவாகும் மின் சக்தி தனி கம்பிகளின் மூலம் மின் தொகுப்பிற்குச் செல்கிறது. எவ்வளவு மின்சாரம் ஒவ்வொரு இல்லத்திலிருந்தும் மின் தொகுப்பிற்குச் செல்கிறது என்பதற்கு மின் அளவைகள் பொறுத்தப்பட்டுள்ளன. இல்லத்திற்குத் தேவையான மின்சாரம் பொதுத் தொகுப்பில் இருந்துதான் நேரடியாக வழங்கப்படுகிறது. அதற்கு தனி மின் அளவை உள்ளது. சூரிய சக்தி மின்சார அளவை, இல்லப் பயனீட்டு அளவில் இருந்து கழித்துக்கொண்டு மீதமுள்ளதற்குத்தான் கட்டணம் வசூலிக்கிறார்கள். மின் தயாரிப்பு கூடுதலாக இருந்தால் வீட்டிற்கு வரவுதான்.

இப்படி மக்களோடு சேர்ந்துகொண்டு சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆஸ்ட்ரேய நாடு, 2000வது ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது நிறுவப்பட்ட ஒவ்வொரு மின் விளக்குக் கம்பங்களிலும் சூரிய சக்தி அமைப்பு சேர்த்தே நிறுவியுள்ளது (படத்தை பார்க்கவும்). இப்படி தனது நாட்டிற்கு தூய்மையான மின் சக்தி தயாரிக்க சூரிய ஒளியை நாடும் ஆஸ்ட்ரேலியா, இந்தியாவிற்கு யுரேனியம் விற்கிறது!

இந்தியப் பிரதமரும் சொல்கிறார், புகழ் பெற்ற விஞ்ஞானி அப்துல்கலாமும் சொல்கிறார், மின்சாரத்திற்கு அணு சக்தி தூய்மையான எரிசக்தி என்று!

Thanks - web dunia

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.