Wednesday, 28 December 2011

..நெய்யாறு இடதுகரை சானல் தண்ணீருக்கு பணம் கேரள அரசு மீது காங்., எம்.எல்.ஏ., பாய்ச்சல்


மார்த்தாண்டம் : நெய்யாறு அணைக்கு குமரி மாவட்டத்தில் இருந்து தண்ணீர் செல்வதால் கேரள அரசுக்கு எப்படி தண்ணீருக்கு பணம் கொடுக்க முடியும் என்று விஜயதரணி எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பியுள்ளார்.நெய்யாறு இடதுகரை சானல் 1965ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த சானலுக்கு நெய்யாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 2004ல் தண்ணீர் திறந்து விடுவது திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட 9 வருவாய் கிராமங்கள் பாதிக்கப்பட்டது.தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியது. விஜயதரணி எம்.எல்.ஏ., கேரள முதல்வரை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இது குறித்து விஜயதரணி எம்.எல்.ஏ., மார்த்தாண்டத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:நெய்யாறு அணைக்கு குமரி மாவட்ட மலையோர பகுதியில் இருந்து கருப்பையாறு வழியாக தண்ணீர் செல்கிறது. இந்த அணைக்கு செல்லும் தண்ணீரில் 40 சதவீதம் குமரி மாவட்டத்தில் இருந்து செல்கிறது. இதனால் தான் அன்று காமராஜர் ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் கேரள அரசு தற்பொழுது தண்ணீர் திறந்துவிட பணம் கேட்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.தண்ணீர் கேட்பதற்கு நமக்கு உரிமை இருந்தும், கேரள அரசு தண்ணீர் தர மறுக்கிறது. இது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆன்றணி ஆகியோரை சமீபத்தில் டில்லியில் சந்தித்து வலியுறுத்தினேன்.இந்நிலையில் உறுதியான முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று கேரளாவில் உள்ள அனைத்து கட்சிகளும் வரிந்துகட்டி நிற்பது கண்டிக்கத்தக்கது. முல்லை பெரியாறு அணை நல்ல நிலையில் உள்ளது. நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்துவிடாத கேரள அரசு முல்லை பெரியாறு அணை பிரச்னையை தீர்க்க முயற்சி செய்யாது.இந்த பிரச்னை சுமூகமாக தீர்ப்பதற்கு மத்திய அரசு தலையிட வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை கேரள அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு விஜயதரணி எம்.எல்.ஏ., கூறினார்.

 "2004ஆம் ஆண்டிற்குப் பிறகு (தமிழ்நாட்டில் இருந்து 39 மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் - திமுக அணியை தேர்வு செய்த நிலையில்) நெய்யாறு அணையில் இருந்து சொட்டு தண்ணீர் கூட இடதுபுறக் கால்வாயில் கேரள அரசு திறந்துவிடவில்லை. விளவங்கோட்டில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்துவந்த தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏனென்று கேட்கவில்லை மத்திய அரசு.

நெய்யாறு அணைக்கு நீர் வரத்து ஒருபோதும் குறையவில்லை. ஆயினும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை மறுத்தது கேரள அரசு. தண்ணீர் வரத்து சிறப்பாக இருந்தும் விளவங்கோட்டிற்கு தண்ணீர் மறுத்தது கேரள அரசு. நெய்யாறு அணையில் இருந்து உபரி நீர் பூவாற்றில் ஓடி அரபிக் கடலில் கலந்தது - வெப் துனியா"
"இந்த கேரளா அரசு தான் புதிய ஆணை கட்டி அதிலிருந்து தமிழகத்துக்கு வேண்டிய அளவு தண்ணீர் கொடுப்பதாக உறுதி அளித்து பேச்சுவர்த்தைக்கு தமிழக அரசை அழைக்கிறது."

Wednesday, 21 December 2011

யுரெனியம் உள்ளது அணு மின் நிலையங்கள் இல்லை!


உலகிலுள்ள யுரேனிய வளத்தில் 40 விழுக்காடு ஆஸ்ட்ரேலியாவில்தான் உள்ளது. இந்தியாவைப் போல் அந்நாட்டு எரிசக்தித் தேவையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்நாட்டில் அணு மின் சக்தி நிலையம் என்று ஒன்று கூட இல்லை. யுரேனியத்தைப் போல் நிலக்கரியும் அதிகமாக உள்ள நாடு என்பதால் அவர்கள் அனல் மின் நிலையங்களைத்தான் அதிகம் அமைத்துள்ளார்கள். அது கரியமிள வாயுவை அதிகம் வெளியேற்றக் கூடியது அல்லவா? எனவே தூய்மையான எரிசக்தி பற்றி பேசும் ஆஸ்ட்ரேலியா அணு சக்தி மின் தயாரிப்புக்கு நாடவில்லை! சூரிய சக்தியையே நாடுகிறது.

அங்குள்ள புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பான்மை வீடுகளில் கூரைகளில் (அங்குள்ள வீடுகளில் மொட்டை மாடிகள் இல்லை) சூரிய ஒளியை வாங்கும் சூரிய சக்தி அமைப்புகளை (Photo Voltaic panels) நிருவியுள்ளார்கள். இதனை நிறுவ அங்குள்ள வங்கிகள் கடன் அளிக்கின்றன. சூரிய சக்தியால் உருவாகும் மின் சக்தி தனி கம்பிகளின் மூலம் மின் தொகுப்பிற்குச் செல்கிறது. எவ்வளவு மின்சாரம் ஒவ்வொரு இல்லத்திலிருந்தும் மின் தொகுப்பிற்குச் செல்கிறது என்பதற்கு மின் அளவைகள் பொறுத்தப்பட்டுள்ளன. இல்லத்திற்குத் தேவையான மின்சாரம் பொதுத் தொகுப்பில் இருந்துதான் நேரடியாக வழங்கப்படுகிறது. அதற்கு தனி மின் அளவை உள்ளது. சூரிய சக்தி மின்சார அளவை, இல்லப் பயனீட்டு அளவில் இருந்து கழித்துக்கொண்டு மீதமுள்ளதற்குத்தான் கட்டணம் வசூலிக்கிறார்கள். மின் தயாரிப்பு கூடுதலாக இருந்தால் வீட்டிற்கு வரவுதான்.

இப்படி மக்களோடு சேர்ந்துகொண்டு சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆஸ்ட்ரேய நாடு, 2000வது ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது நிறுவப்பட்ட ஒவ்வொரு மின் விளக்குக் கம்பங்களிலும் சூரிய சக்தி அமைப்பு சேர்த்தே நிறுவியுள்ளது (படத்தை பார்க்கவும்). இப்படி தனது நாட்டிற்கு தூய்மையான மின் சக்தி தயாரிக்க சூரிய ஒளியை நாடும் ஆஸ்ட்ரேலியா, இந்தியாவிற்கு யுரேனியம் விற்கிறது!

இந்தியப் பிரதமரும் சொல்கிறார், புகழ் பெற்ற விஞ்ஞானி அப்துல்கலாமும் சொல்கிறார், மின்சாரத்திற்கு அணு சக்தி தூய்மையான எரிசக்தி என்று!

Thanks - web dunia

Monday, 12 December 2011

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.

குழந்தைகள் முடிவெடுக்கட்டும் :-

எதையாவது சமைத்துவிட்டு "இதை சாப்பிடப் போறியா இல்லையா?" என்று குழந்தைகளை மிரட்டுவதை மறந்துவிடுங்கள். நாளை அல்லது அடுத்த ஒரு வாரம் உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் எனபதைக் கேட்டு சமைத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது. அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால் அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம்.

இந்த வம்பே வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2 அல்லது 3 உணவு வகைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்கலாம். குழந்தைகளிடையே எதை சாப்பிட வேண்டும் என்ற சண்டை ஏற்படலாம். அப்படி ஏற்படாமல் இருக்க குழந்தைகளிடையே உருவாகும் போட்டியை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமையலில் குழந்தைகள் உதவட்டும் :-

நீங்கள் சமைக்கும்போது உங்கள் குழந்தைகளின் உதவியை நாடுங்கள். அவர்கள் வயதிற்கேற்ப சமையலில் உங்களுக்கு உதவும்படி கேட்டு கொள்ளுங்கள். பரிமாறும் போது, குழந்தை உதவியதை மறக்காமல் அனைவரிடமும் சொல்லுங்கள். நீங்களும் மற்ற குடும்பத்தினரும் குழந்தையைப் பாராட்டுங்கள். இப்போது குழந்தை முகம் சுளிக்காமல் சாப்பிடுவதைப் பாருங்கள்!

வித்தியாசமாக சாப்பிடட்டும் :-

பெரியோர்கள் சாப்பிடுவதைப் போலவே குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். "சப்பாத்தியுடன் ஜாம் யாராவது சாப்பிடுவாங்களா?" "சீஸ் சாதத்துடன் சாப்பிடக் கூடாது!" இப்படி சொல்வதைவிட்டு அவர்கள் விரும்பும் வகையில் உணவை கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பசிக்கும் போது சாப்பிடட்டும் :-

நாம் சாப்பிடும் நேரங்களில் குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதால் தான் நாம் அவர்களை வற்புறுத்துகிறோம். பசித்தால் அதைத் தாங்கிக் கொண்டு எந்தக் குழந்தையும் சாப்பிடாமல் இருக்காது! நம் வற்புறுத்தல் அவர்களுக்கு சாப்பிடும் பழக்கத்தைவிட உணவை வெறுக்கும் பழக்கத்தையே உண்டாக்கும். இதை தவிர்க்க குழந்தைகள் விரும்பி கேட்கும் போது உணவு கொடுத்தால் அவர்களுக்கு உணவைக் கண்டால் ஓட வேண்டும் என்ற நினைப்பு மாறிவிடும்.

ஷ்ஷ்ஷ்!! தெரியாமலே போகட்டும் :-

பல சமயங்களில் சத்தான உணவு வகைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக அவற்றை ஒதுக்கிவிட வேண்டாம். மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி / துறுவி அல்லது நன்றாக அரைத்து / மசித்து அவர்களுக்குப் பிடித்த உணவுடன் கலந்துவிடலாம். இவற்றைக் குறைவானஅளவில் சேர்ப்பது நல்லது. அதிக அளவில் கலந்து ருசி மாறிவிட்டாலும் கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு தக்காளி சாஸ், சீஸ் போன்றவை!

மேலே உள்ள குறிப்புகளை பின்பற்றினால் ஒரே நாளில் அல்லது வாரத்தில் குழந்தைகள் மாறிவிடுவார்கள் என்று எண்ண வேண்டாம். தொடர்ந்து பின்பற்றுங்கள். ஒரு மாதத்தில் நீங்களே மாற்றத்தைப் பார்க்கலாம்.

Wednesday, 7 December 2011

இங்கிருந்தே நினைத்து நலம் பெறுவோம்: இன்று திருக்கார்த்திகை

கைலாயத்தில் ஒருநாள் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக பார்வதி கைகளால் மூடினாள். சூரிய சந்திரர்களாக விளங்கும் கண்களை மூடியதால் உலகமே இருண்டது. உடனே, தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஒளியைப் பரப்பி உயிர்களைக் காத்தருளினார். பயந்து போன உமையவள், , ""உலகத்தை இருளில் மூழ்கடித்த பாவம் தீர பூலோகத்தில் தவம் செய்து விட்டு வர வழிகாட்டுங்கள்!,'' என்றாள். சுவாமி அவளிடம், "" பூலோகத்தில் காஞ்சி என்னும் தலம் சென்று என்னைப் பூஜித்து வா,'' என்று அருளினார். காஞ்சிபுரத்தில் கம்பாநதியருகே மணலைச் லிங்கமாக்கி தவத்தில் ஆழ்ந்தாள்.

தேவியின் பக்தியைச் சோதிப்பதற்காக இறைவன் கம்பாநதியில் வெள்ளம் பெருகச் செய்தார். "சிவ சிவ' என்று சொன்னபடியே, லிங்கத்தைத் தன் மார்போடு அணைத்தாள். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் அங்கே எழுந்தருளினார். "" இங்கு செய்த தவப்பயனால் உலகை இருளாக்கிய பாவம் தீர்ந்தது. இனி, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான அண்ணாமலைக்குச் சென்று எம்மை பூஜிப்பாயாக. அங்கே எம் இடப்பாகத்தில் உன்னை ஏற்றுக் கொள்வேன்!'' என்றார். ""பெருமானே! நகரத்தில் சிறந்தது காஞ்சிபுரம் என்று முன்பொரு நாள் கூறினீர். இப்போதோ நினைக்க முக்தி தருவது அண்ணாமலை என்று சொல்கிறீரே!'' என்று தேவி விளக்கம் கேட்டாள். ""தேவி! மனதால் நினைத்தால் கூட பாவம் போக்கும் புண்ணியபூமி அண்ணாமலை. அண்ணாமலையை நினைத்தாலும், சொன்னாலும், கேட்டாலும் புண்ணியம். இருந்த இடத்தில் நினைத்தாலும் தரிசித்த பலன் கிடைக்கும். அதற்கு நிகரான தலம் பூலோகத்தில் வேறில்லை!,'' என்று சொல்லி மறைந்தார்.

பின்பு தேவி, கணபதி, முருகன், சப்தகன்னியர், எட்டு பைரவர்கள், சிவகணங்களை தன்னோடு அழைத்துக் கொண்டு, அண்ணாமலைக்கு தேவி புறப்பட்டாள். வரும் வழியில் தேவிக்கு தண்ணீர் தேவைப்பட்டது. அன்னையின் ஆவலை நிறைவேற்ற முருகன், வேலை ஏவினார். தரையைப் பிளந்து கொண்டு தண்ணீர் பெருகியது. சேய் முருகன் வரவழைத்ததால் "சேயாறு' (தற்போது செய்யாறு)என்றானது. அந்நீரைப் பருகி மகிழ்ந்தாள். திருவண்ணாமலையில் கவுதமரிஷியின் குடிலை அனைவரும் வந்தடைந்தனர். கவுதமரின் மனைவி அகல்யாவும், மகன் சதானந்தரும் அவர்களை வரவேற்றனர். ""என்ன புண்ணியம் செய்தோம்! உலகாளும் உமையவள் எங்களை நாடி வந்திருக்கிறாளே! '' என்று கவுதமர் மகிழ்ச்சியில் திளைத்தார். அவரிடம் ""கவுதமரே! இந்த அண்ணாமலையின் மகத்துவத்தைச் சொல்லுங்கள்!,'' என்றாள் தேவி. ""தாயே! தாங்கள் அறியாததா? இருந்தாலும் கேளுங்கள். இதை நினைத்தாலே புண்ணியம். திருமால், நான்முகன், தேவர்கள், முனிவர்கள், ஞானியர் என்று கோடானுகோடி தவம் செய்த ஞானமலை. இங்கு செய்த புண்ணியம் ஒன்று நூறாய் வளரும்,'' என்றார்.

தன் அன்னை தங்குவதற்காக பந்தலிட்டு வாழைமரம் நாட்டி வைத்தார் முருகப்பெருமான். மலர் சூடிய கூந்தலை விரித்து ஜடாமுடியாக்கி, ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டாள் அம்பிகை. மரவுரி அணிந்து, நெற்றியில் விபூதி இட்டபடி ஊசிமுனையில் பெருவிரலை ஊன்றி பந்தலுக்கு நடுவில் தவத்தில் ஆழ்ந்தாள். பந்தலைச் சுற்றி சப்தகன்னியர், பைரவர்கள், விநாயகர், முருகன் காவல் காத்தனர். அந்த தவக்கனல் கயிலையை எட்டியது. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி இரவில் (திருக்கார்த்திகை தினம்) ஈசன் தேவிக்கு காட்சியளித்தார்.

""தேவி! உன் தவத்தைக் கண்டு மெய்சிலிர்த்தோம். எம்முடைய இடப்பாகத்தில் என்றும் நீங்காதிருப்பாயாக!,'' என்று வரம் அளித்தார். அம்மையும், அப்பனும் அன்று முதல் ஒரு உடல் மட்டுமல்ல, ஓருயிராகவும் ஆயினர். வலப்பக்கம் ஜடை,கொன்றைமாலை, மார்பு, சூலம், வீரக்கழல், பவளநிறம், அபயகரம் ஆகியனவும் இடப்பக்கம் கூந்தல், மலர்மாலை, கச்சு, நீலோற்பல மலர், சிலம்பு, பச்சைநிறம், வரதக்கரம் ஆகியனவும் கொண்டு அம்மையப்பராக அருள்புரிந்தனர். இக்காட்சியைக் கண்ட தேவர்கள் யாவரும் பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர். இப்போதும், திருவண்ணாமலையில் தீபத்திருநாளன்று அம்மையப்பர் ஒருங்கிணைந்த அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்கலாம். திருக்கார்த்திகையன்று மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும் என்பது சிறப்பு.

Wednesday, 30 November 2011

ஊழலில் சீனாவை விஞ்சிய இந்தியா


டிரான்பரன்ஸி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 95-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதன்மூலம் சீனாவைவிட ஊழல் மிகுந்த நாடு என்ற 'பெருமை' யை இந்தியா பெற்றுள்ளது. சீனா இந்த பட்டியலில் 75-வது இடத்தில் உள்ளது.


எனினும் பாகிஸ்தானை பார்த்து நாம் சிறிது ஆறுதல் அடையலாம். பாகிஸ்தான் 134-வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் நியுஸிலாந்து முதலிடத்தைப் பிடித்து அனைத்து நாடுகளையும்விட நாங்கள்தான் ஊழல் குறைவானவர்கள் என்று நிரூபித்து சாதனை புரிந்துள்ளது.

ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள்:

1.நியுஸிலாந்து

2.டென்மார்க்

3.ஃபின்லாந்து

4.ஸ்வீடன்

5.சிங்கப்பூர்

6.நார்வே

7.நெதர்லாந்து

8.ஆஸ்திரேலியா

8.ஸ்விட்சர்லாந்து

10.கனடா

இதில் அமெரிக்கா 24-வது இடத்தையும், சவுதி அரேபியா 57-வது இடத்தையும், துருக்கி 61-வது இடத்தையும், இலங்கை 86-வது இடத்தையும் பிடித்துள்ளன.

!!!!!!!!!!!நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!!!!!!!!!!!!!

 
 
எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் சனிபகவான்தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.!!!!!!!!