--> இவர்கள் போராட்டத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் ஜப்பான் அணு உலைகளைகளில் நடந்த விபத்தினால் அன்றைய தினத்தில் ஜப்பான், அணு உலைகளுக்கு பதிலாக மாற்று வழியை காணவேண்டும் என்று ஜப்பான் கூறியதை கெட்டியாக பிடித்துகொண்டு இங்கும் அணு உலையை மூடவேண்டும் என்று முழங்கி வந்தார்கள், அனால் இன்று ஜப்பானே தனது நில நடுக்க நிவாரணப்பணிகளை முடித்துக்கொண்டு அதன் அணு உலைகளை செயல்படுத்த துவங்கி விட்டது. அனால் இங்கு இன்னும் அடிப்படை பணிகளை கூட முடிக்க விடாமல் தடை போட்டு வருகிறார்கள்.
--> சரி அணு உலைகளினால் ஏற்படும் பேராபத்தை எதிர்த்துதான் இவர்களது முழக்கம்
என்பது உண்மையானால் ஏன் இவர்கள் கல்பாக்கம் அணு உலைகளை மூடுவது சம்மத்தமாக எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.
--> ஆபத்து என்று எடுத்துக்கொண்டால் சாதாரண கொசு வர்த்தி கோயிலினால் கூட கான்செர் பரவும் ஆபாயம் உள்ளதென தெரிவிக்கிறது ஒரு ஆய்வறிக்கை அப்படியென்றால் இந்த சகோதரர்கள் இதனை ஏன் எதிர்கவில்லை, மேலும் நகர வாசிகளை விட மீனவ நண்பர்களுக்கு கடலில் வரும் சுனாமியை பற்றி நன்கு அறிவர் அப்படி என்றால் அவர்கள் என்ன எப்போதோ வரும் சுனாமிக்காக தங்களது இருப்பிடத்தை காலி செய்து விட்டு வந்துவிட்டனரா என்ன? இல்லையே.
--> அணு உலைகளின் பணிகள் முழுவதுமாக முடிந்து மின்சாரத்தில் தமிழகம் தன்னிறைவு பெரும் வேலையில் அணு உலைகள் வேண்டாம் என்று போடும் கோஷம் சரியானது அல்ல, தற்போதைக்கு அணு உலைகளை செயல் படுத்த துவங்கி விட்டு மேலும் புதிய அணு உலைகளுக்கு செலவு செய்யாமல் அரசை மாற்றுவழி காணத தூண்டுகிற இயக்கமாக மாறினால் தமிழகம் இவர்கள் பின்னல் நிற்கும்.....